Need help? Talk to our expert.
WhatsApp


இரட்டை மார்க்கர் சோதனை: அது என்ன, அதன் போது என்ன நடக்கிறது?

Metropolis Healthcare
Last Updated June 19, 2025
Tamil
இரட்டை மார்க்கர் சோதனை: அது என்ன, அதன் போது என்ன நடக்கிறது?

உங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி மும்மாதத்தில், கருவிலுள்ள சிசுவைப் பற்றி உங்கள் மனதில் எண்ணற்ற கேள்விகள் எழும். பிறக்காத உங்கள் குழந்தையின் பாலினம் மற்றும் பிற விரிவான மருத்துவ விவரங்களை நீங்கள் அறியாமல் இருந்தாலும், உங்கள் மகப்பேறு மருத்துவர் குழந்தைப் பிறப்பிற்கு உங்களைத் தயார்படுத்த, ஒரு சில பரிசோதனைகளைச் செய்ய வலியுறுத்துவார்.

கருவிலுள்ள சிசுவிற்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் டபுள் மார்க்கர் கர்ப்பகால பரிசோதனையின் விரிவான ஆய்விற்காக உங்கள் இரத்த மாதிரி சேகரிக்கப்படும்.

கர்ப்பகாலத்தில் டபுள் மார்க்கர் பரிசோதனை

முதல்-மும்மாத கர்ப்பகால ஸ்க்ரீனிங்கில், மெட்டர்னல் சீரம் ஸ்க்ரீனிங் என்று அழைக்கப்படும், டபுள் மார்க்கர் பரிசோதனை செய்யப்படும். இது துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய அறிவியல் பரிசோதனையாக இல்லையென்றாலும்கூட, கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு ஏற்பட்டுள்ள குரோமோசோமல் குறைபாடுகளை பெரும்பாலும் கணிக்க உதவுகிறது. இந்தப் பரிசோதனையானது நோய்கண்டறிதல் பரிசோதனை என்பதைவிட சிசுவின் குறைபாடுகளைக் கணிக்கும் பரிசோதனையே ஆகும்.

கர்ப்பிணியின் இரத்தத்தில் உள்ள பீட்டா-ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (பீட்டா-எச்.சி.ஜி) மற்றும் கர்ப்பத்துடன் தொடர்புடைய பிளாஸ்மா புரோட்டீன் ஏ (PAPP-A) ஆகியவற்றின் அளவுகள் கணக்கிடப்படுகின்றன.

கர்ப்பத்தில் உள்ள பெண் சிசுக்களுக்கு, சராசரியாக, 22 XX குரோமோசோம் ஜோடிகள் இருக்கும், அதேவேளையில் ஆண் சிசுக்களுக்கு 22 XY குரோமோசோம் ஜோடிகள் இருக்கும். சராசரி எண்ணிக்கையைவிட ஒரு ஜோடி குரோமோசோம் சிசுவிற்கு கூடுதலாக இருப்பதால் ஏற்படும் குரோமோசோமல் குறைபாடுகளில் ட்ரைசோமி கோளாறும் ஒன்று. குரோமோசோம் 21 ஒன்று கூடுதலாக இருந்தால், ட்ரைசோமி எனப்படும் டவுன் சிண்ட்ரோமை ஏற்படுத்துகிறது. இதேபோல், குரோமோசோம் 18 ஒன்று கூடுதலாக இருந்தால் எட்வெர்டு சிண்ட்ரோமும், குரோமோசோம் 13 ஒன்று கூடுதலாக இருந்தால் பட்டாவ்'ஸ் சிண்ட்ரோமும் பெரும்பாலும் ஏற்படக்கூடிய 2 குரோமோசோமல் குறைபாடுகள் ஆகும்.

குரோமோசோமல் குறைபாடுள்ள கர்ப்பங்களில் hCG மற்றும் PAPP-A அளவுகள் வழக்கத்தைவிட வித்தியாசமாக இருக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.

இதில் இரத்திலுள்ள அளவுகளானது ஒரு பகுதி மட்டுமே. நுச்சல் டிரான்ஸ்லூசென்சி (NT) ஸ்கேன்கள் என்பது உங்கள் குழந்தையின் கழுத்தின் பின்புறத்திலுள்ள இரத்தத்தை மட்டுமே பார்க்காமல், ட்ரான்ஸ்பரன்ட் திசுக்களைப் பார்க்கும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ஆகும்.

கர்ப்பகாலத்தில் எப்போது டபுள் மார்க்கர் பரிசோதனை செய்யவேண்டும்?

பிரசவத்திற்கு முன் அல்லது பின் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த டபுள் மார்க்கர் பரிசோதனையானது கர்ப்பத்தின் முதல் மும்மாத காலத்தில் செய்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. ஸ்கிரீனிங் பரிசோதனை செயல்முறை முழுவதும் இரத்தத்தில் உள்ள பீட்டா-ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஃப்ரீ பீட்டா-hCG) மற்றும் கர்ப்பம் தொடர்பான புரதங்கள் (PAPP-A) அளவிடப்படுகின்றன.

இந்த ஸ்க்ரீனிங் பரிசோதனையை செய்துகொள்வதற்கான கால இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும். இப்பரிசோதனையைச் செய்துகொள்வதற்கான சரியான நேரத்தை மருத்துவர் அல்லது உதவி செவிலியர் அறிவார். அறுவைச் சிகிச்சையானது கர்ப்பகாலத்தின் 11வது முதல் 14வது வாரத்திற்குள் பொதுவாக மேற்கொள்ளப்படும்.

கர்ப்பகாலத்தில் டபுள் மார்க்கர் பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது?

கர்ப்பத்தின் முதல் மும்மாத காலத்தில் டபுள் மார்க்கர் பரிசோதனை மற்றும் NT ஸ்கேன் உட்பட்ட ஸ்க்ரீனிங்கை செய்துகொள்வது பரிந்துரைக்கப்பட்டாலும் அவசியமானது இல்லை.

இருப்பினும், நீங்கள் 35 வயதைக் கடந்தபின் கர்ப்பமாகியுள்ளீர்கள் அல்லது குறிப்பிட்ட குரோமோசோமல் குறைபாடு உங்கள் குடுபத்தில் உள்ளோருக்கு அடிக்கடி ஏற்பட்டுள்ளது போன்ற, அதிக குரோமோசோமல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், நீங்கள் ஸ்க்ரீனிங் பரிசோதனையைச் செய்துகொள்வது சிறந்தது.

இந்த ஸ்க்ரீனிங் பரிசோதனையின் முடிவுகள் உங்கள் சிசுவிற்கு ட்ரைசோமி பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே குறிக்கும், அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் குறிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் முடிவுகள் மூலம் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய குரோமோசோமல் குறைபாடு நிச்சயமாகத் தீர்மானிக்க முடியாது.

டபுள் மார்க்கர் பரிசோதனையைச் செய்வது தேவையா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யும்முன், இப்பரிசோதனை முடிவுகள் உங்கள் கர்பத்தை எவ்வாறு மாற்றியமைக்கக்கூடும் என்பதைப் பற்றி சிந்திப்பது அவசியமாகும். முடிவுகள் இயல்பான அளவைவிட அதிகமாக இருந்தால் என்ன செய்யவேண்டும்? அதன்பின் குரோமோசோமல் குறைபாடுகளை உறுதிசெய்ய இன்னும் கூடுதலாகப் பரிசோதனைகள் செய்துகொள்ளத் தயாரா? கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் பற்றி அறிந்துகொள்ளும்போது எப்படி உணர்வீர்கள்? கர்ப்பகால கவனிப்பு விஷயத்தில், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அணுகுமுறையை மாற்றவேண்டுமா?

உங்களின் இத்தகைய கேள்விகளுக்குச் சரியான பதில்கள் என எதுவும் இல்லை. ஏனென்றால், அத்தகைய பதில்கள் உங்கள் சூழ்நிலைகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் குரோமோசோமல் குறைபாட்டு வரலாற்றைப் பொறுத்து இருக்கும்.

கர்ப்பகாலத்தின்போது டபுள் மார்க்கர் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

டபுள் மார்க்கர் பரிசோதனையில் இரத்த மாதிரி பரிசோதனை மற்றும் அல்ட்ரா-சவுண்ட் பரிசோதனை செய்யப்படுகிறது. டபுள் மார்க்கர் பரிசோதனையில் (கர்ப்பம் தொடர்பான பிளாஸ்மா புரதம் A) பகுப்பாய்வு செய்யப்படும் இரண்டு மார்க்கர்கள் ஃப்ரீ பீட்டா hCG (ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின்) மற்றும் PAPP-A ஆகும்.

கர்ப்பிணிப் பெண்களில் ப்லசென்டா (நஞ்சுக்கொடி) ஃப்ரீ பீட்டா-hCG எனப்படும் கிளைகோபுரோட்டீன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால், ட்ரைசோமி 18 மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்றவற்றால் கருவில் உள்ள சிசு பாதிப்படைய அதிக ஆபத்து உள்ளது.

PAPP-A பிளாஸ்மா புரோட்டீன் உடம்பின் மிகமுக்கியமான அங்கமாகும். குறைவான பிளாஸ்மா புரோட்டீன் அளவு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்படுவதற்கான அதிக ஆபத்தைக் குறிக்கிறது. ஸ்க்ரீனிங் பரிசோதனையின் முடிவுகள் பாசிட்டிவ், ஹை-ரிஸ்க் (அதிக ஆபத்து), மற்றும் நெகட்டிவ் என இவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

இந்தியாவில் டபுள் மார்க்கர் பரிசோதனைக்கு ஆகும் செலவு எவ்வளவு?

நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸைப் பொறுத்து டபுள் மார்க்கர் பரிசோதனை செய்து கொள்வதற்கான செலவு மாறுபடும். நீங்கள் இந்தப் பரிசோதனையை செய்துகொள்வதற்கு அவசியம் இல்லை என்றாலும்கூட, நீங்கள் இதைச் செய்துகொள்ளும் பட்சத்தில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் அதற்கான பணத்தைச் செலுத்தும்.

உங்கள் காப்பீடு மற்றும் பரிசோதனைக்கு முந்தைய முன்-அங்கீகரிப்பு செயல்முறைகள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒருவேளை உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாதபட்சத்தில், டபுள் மார்கர் பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனை அல்லது லேபை நேரடியாக அழைத்து, அதற்கு ஆகும் செலவு மற்றும் வழங்கப்படக்கூடிய ஏதேனும் தள்ளுபடிகள் குறித்து கேட்டறிந்து கொள்ளலாம்.

நீங்கள் முழுமையான முதல் மும்மாத ஸ்கிரீனிங் பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், நீங்கள் அதற்கும் மற்றும் NT ஸ்கேனுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏனென்றால், பெரும்பாலும் இவை இரண்டுமே சேர்த்துதான் செய்யப்படுகிறது. நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் பரிசோதனை செய்துகொள்ள விரும்பும் மருத்துவமனை பொறுத்து, டபுள் மார்க்கர் பரிசோதனை விலைகள் ரூ. 2,500 முதல் ரூ.3500 வரையில் ஆகலாம்.

பரிசோதனை முடிவுகள் பெற எவ்வளவு காலம் எடுக்கும்?

டபுள் மார்க்கர் பரிசோதனைக்கு ஒரு அடிப்படை இரத்தப் பரிசோதனை கட்டாயமாகும். பரிசோதனையை மேற்கொள்ள லேபிற்கு உங்கள் மருத்துவர் வழங்கிய பரிந்துரைச் சீட்டு அவசியமாக எடுத்துச்செல்ல வேண்டும். இது உண்ணாமல் இருந்து செய்துகொள்ள வேண்டிய பரிசோதனை இல்லை என்பதால், உங்களுக்கு ஏதேனும் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படாதபட்சத்தில், இந்தப் பரிசோதனையை, செய்துகொள்வதற்கு முன் நீங்கள் எப்போதும் போல உணவு உண்ணலாம் மற்றும் தண்ணீர் அருந்தலாம்.

பரிசோதனை முடிவுகளை வழங்க லேப்கள் எடுத்துக்கொள்ளும் நேரங்கள் வெவ்வேறாக இருக்கலாம். பொதுவாக பரிசோதனை முடிவுகளை வழங்க லேப்கள் 3 முதல் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். நீங்கள் பரிசோதனை செய்த கிளினிக் உங்கள் பரிசோதனை முடிவுகளோடு உங்களை அழைக்குமா அல்லது நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டுமா என்பதைத் தெளிவாகக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டபுள் மார்க்கர் பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ்வாக இருந்தால் என்ன செய்வது?

மேலே கொடுக்கப்பட்டிருந்த ஏதேனும் குரோமோசோமல் குறைபாடு கருவில் உள்ள சிசுவுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை பின்வரும் விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடலாம். டபுள் மார்க்கர் பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில், பிரச்சினைக்கான மூலத்தைக் கண்டறிய, அம்னோசென்டெசிஸ் அல்லது கோரியானிக் வில்லஸ் சேகரிப்பு போன்ற கூடுதல் நோயறிதல் நடைமுறைகளைச் செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

கர்ப்பகாலத்தின்போது செய்யப்படும் டபுள் மார்க்கர் பரிசோதனை முடிவுகளின் இயல்பான வரம்பு என்ன?

டபுள் மார்க்கர் பரிசோதனை முடிவின் இயல்பான அளவு 1 mL-க்கு 25,700 முதல் 2,88,000 mIU வரை ஆகும்.

டபுள் மார்க்கர் பரிசோதனை எவ்வளவு துல்லியமானது?

டபுள் மார்க்கர் பரிசோதனை என்பது வெறும் ஆயத்த பரிசோதனை மட்டுமே ஆகும். இப்பரிசோதனைக்குச் சாதாரண உணர்திறனில் பாதி மட்டுமே தேவைப்படுகிறது. பாதிக்கு மேற்பட்ட பரிசோதனைகளில், முடிவு தவறானதாக இருக்கக்கூடும். பரிசோதனை முடிவுகளை உறுதிப்படுத்த அம்னோசென்டெசிஸ் பரிசோதனை கூடுதலாக மேற்கொள்ளப்படவேண்டும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

We value your feedback. Share your thoughts, questions, or suggestions and our team will review them shortly.

  • Stay respectful and constructive.
  • Avoid posting personal or sensitive information.
  • Keep your message clear and concise.

Thank you for being a part of our community and helping us improve.

TruHealth Packages

Choose from our wide range of TruHealth Packages and Health Checkups

Proceed

To book your home visit call us at 080-4891-1400

Book a Home Visit Now!

080-4891-1400